பனமலைக்கு கிழக்கே உள்ளது பிரம்மதேசம். செஞ்சிபுதூர் செல்லும் சாலையில் சென்று காணவேண்டிய, மிகப்பழமையான சிற்பக் கருவூலம் இந்தத் திருத்தலம். சந்தடியற்று, ஒதுங்கி நிற்கும் ஊரின் நடுவே, உள்ளூர் மக்கள் இதன் அருமையை அறியாதிருக்க, மத்திய அரசின் தொல்லியல்துறை, இதன் பழமையை அறிந்துணர்ந்து, பழமை அழியாதிருக்கும் வகையில் திருப்பணியைச் செய்து வருகிறது. வழிபாட்டுக்கு வருமா என்பதை பிரம்மபுரீசுவரர் தான் உறுதி செய்ய வேண்டிய நிலை.
வேதம் ஓதும் அந்தணர்களின் குடியிருப்பை உருவாக்கி, ஆலயமும் எழுப்பி, அந்த நாட்களில்,அந்த ஊர்களை பிரம்மதேசம், சதுர்வேதிமங்கலம் என்று அழைத்தனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இப்படி ""பிரம்மதேசங்கள்'' உள்ளதைக் காணலாம்.
இரண்டு கோயில்கள்
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசத்தில் பாதாலீசுவரர்,பிரம்மபுரீசுவரர் என்று இரு ஆலயங்கள் உள்ளன.
பிரம்மபுரீசுவரர் ஆலயம் ஊருக்கு வடமேற்கில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சதுர வடிவிலான கருவறையில், வட்டவடிவமான ஆவுடையாரின் மேல், பிரம்மபுரீசுவரர், சிவலிங்கத்திருமேனி நம்மைக் கவருகிறது.
பூதவரிசையிலேயே பஞ்சத்தந்திரக் கதைகளும், சிவபுராணச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.
0 கருத்துகள்