செஞ்சி என்ற ஊர் தென் ஆர்க்காடு
மாவட்டத்தில்
உள்ளது. திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர்
உள்ளது. செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக்
கோட்டை உள்ளது.
உள்ளது. திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர்
உள்ளது. செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக்
கோட்டை உள்ளது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி
தமிழ்நாட்டின்
வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார்
கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள
மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார்
கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண
கோனார் செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்
என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது
என்றும் கூறப்படுகிறது.
வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார்
கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள
மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார்
கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண
கோனார் செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்
என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது
என்றும் கூறப்படுகிறது.
கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில்
செஞ்சி விஜய நகர
அரசின் ஆட்சியின்கீழ் வந்தது. விஜய நகர அரசுக் காலத்தில்
செஞ்சிக் கோட்டை மிக்க பலம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டது.
விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509-1529)
நாயக்கர் மரபைச் சேர்ந்த வையப்பர் என்பவரைத் தம்
பிரதிநிதியாகச் செஞ்சியில் நியமித்தார். வையப்பர் செஞ்சியைத்
தலைநகராகக்கொண்டு தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி
புரியலானார் (1526). இவர் விஜய நகர மன்னர்களிடம் விசுவாசமாக
நடந்துகொண்டார். வையப்பரை அடுத்து துபாகி கிருஷ்ணப்பர்
என்பவர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர் ஆனார். துபாகி
கிருஷ்ணப்பர் காலத்தில் அனந்தகிரிக் கோட்டை ‘இராஜகிரிக்
கோட்டை’ என்ற பெயரைப் பெற்றது. இவர் இராஜகிரி
மலையில் கொத்தளங்கள், தானியக் களஞ்சியங்கள், மூன்று
குன்றுகளைச் சுற்றியுள்ள மதில்கள் ஆகியவற்றைக் கட்டினார்.
இவரையடுத்து முதலாம் கிருஷ்ணப்பர், இரண்டாம்
கிருஷ்ணப்பர் ஆகியோர் செஞ்சி நாயக்க அரசின்
ஆளுநர்களாக இருந்தனர்.
அரசின் ஆட்சியின்கீழ் வந்தது. விஜய நகர அரசுக் காலத்தில்
செஞ்சிக் கோட்டை மிக்க பலம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டது.
விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509-1529)
நாயக்கர் மரபைச் சேர்ந்த வையப்பர் என்பவரைத் தம்
பிரதிநிதியாகச் செஞ்சியில் நியமித்தார். வையப்பர் செஞ்சியைத்
தலைநகராகக்கொண்டு தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி
புரியலானார் (1526). இவர் விஜய நகர மன்னர்களிடம் விசுவாசமாக
நடந்துகொண்டார். வையப்பரை அடுத்து துபாகி கிருஷ்ணப்பர்
என்பவர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர் ஆனார். துபாகி
கிருஷ்ணப்பர் காலத்தில் அனந்தகிரிக் கோட்டை ‘இராஜகிரிக்
கோட்டை’ என்ற பெயரைப் பெற்றது. இவர் இராஜகிரி
மலையில் கொத்தளங்கள், தானியக் களஞ்சியங்கள், மூன்று
குன்றுகளைச் சுற்றியுள்ள மதில்கள் ஆகியவற்றைக் கட்டினார்.
இவரையடுத்து முதலாம் கிருஷ்ணப்பர், இரண்டாம்
கிருஷ்ணப்பர் ஆகியோர் செஞ்சி நாயக்க அரசின்
ஆளுநர்களாக இருந்தனர்.
இரண்டாம் கிருஷ்ணப்பர் (1570-1608) வலிமைமிக்க மன்னராகத் திகழ்ந்தார். சிறந்த ஆட்சியாளராக விளங்கினார். இவரது மேலாதிக்கத்தை வேலூரில் ஆட்சி புரிந்த நாயக்க வம்சத்தினரும் ஏற்றனர். இவர் ஆட்சிக் காலத்தில் செஞ்சி தமிழ்நாட்டில் புகழ்மிக்க நகராக விளங்கியது. இவர் டச்சுக்காரர்களுக்குக் கடலூருக்கு அருகில் வாணிபத்தலம் அமைக்க அனுமதி கொடுத்தார். இவர் விஜய நகர அரசருக்குக் கப்பம் செலுத்தத் தவறியதால், விஜய நகர அரசர் முதலாம் வெங்கடன் செஞ்சிமீது படையெடுத்து வென்றார், இரண்டாம் கிருஷ்ணப்பர் சிறை பிடிக்கப்பட்டார். இவருக்குப்பின் செஞ்சி நாயக்க அரசு வலிமையற்றதாகிவிட்டது. கி.பி.1649இல் கடைசி செஞ்சி நாயக்கரைத் தோற்கடித்து பீஜப்பூரின் படைகள் செஞ்சியைப் பிடித்தன. பீஜப்பூர் படைகள் செஞ்சியை பாதுஷா பாத் என்று பெயரிட்டு ஆட்சி புரிந்தன. 1677இல் மராட்டிய தலைவர் சிவாஜியால் செஞ்சி கைப்பற்றப்பட்டது. சிவாஜி காலத்தில் இக்கோட்டை வலுவானதாக்கப்பட்டது. மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் அவர் தளபதி சுல்பிகர்கானின் நீண்ட முற்றுகைக்குப்பின் செஞ்சி மராட்டியரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. சுல்பிகர்கான் சொரூப்சிங் என்ற இராஜ புத்திரரிடம் செஞ்சியின் ஆட்சியை ஒப்படைத்தார். பின் செஞ்சி மொகலாயருக்கு உட்பட்ட, கர்நாடக நவாபின் ஆட்சிப்பகுதி ஆயிற்று.
சொரூப்சிங்கின் வீரமகன் தேசிங்குராஜன்
ஆவார்.
இவர் ஆர்க்காட்டு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து, அவருக்குக் கப்பம் கட்டவில்லை. இதனால் ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லா-கான் கி.பி. 1713இல் ஒரு படையுடன் தேசிங்கு ராஜனைத் தாக்கினார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய போர் நடந்தது. தேசிங்குராஜன் வீரமாகப் போரிட்டார். அவருக்கு மாபத்கான் என்ற நண்பரும் உதவினார். இருப்பினும் தேசிங்குராஜன் போரில் கொல்லப்பட்டார். ஆர்க்காட்டு நவாப் செஞ்சியைக் கைப்பற்றினார். தேசிங்கின் மனைவி உடன் கட்டையேறினார். அவ்வரசியின் வீரத்தைப் பாராட்டி ஆர்க்காட்டு
|
0 கருத்துகள்