சங்ககாலச் சேரர் முத்திரை (இலச்சினை) கண்டுபிடிப்பு

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்


 சங்ககாலச் சேர மன்னர்களின் முத்திரை, பல அரியவகைக் குறியீடுகள், தறிக்கோல் ஒன்று, தாங்கிகள், இரண்டு மண்விளக்குகள், மூன்று பலகறைப் பாசிகள்(சோழிகள்), 3௦0 பல வண்ண மணிகள் எனப் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

அமண என்று எழுதப்பட்டுள்ளது
இதைப்பற்றி ஆய்வு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் பொறியாளர் சு.இரவிக்குமார் மேலும் கூறியதாவது.





பதிற்றுப்பத்து, போற்றும் சங்ககாலச் சேர மன்னர்கள் வில்-அம்பு முத்திரையைத் தங்களது இலச்சினையாகப் பயன்படுத்தி உள்ள செய்தி அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, போன்ற சங்க இலக்கிய நூல்களில் விரவிக் கிடக்கின்றன. குறிப்பாக அகநானூற்றுப் பாடல் எண் : 127, 5 ஆம் அடி
வலம்படு முரசின் சேரல்ஆதன்
முந்நீர் ஒட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து

அகநானூற்றுப்பாடல் எண்396 – 17 ஆம் அடி
ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்று முதிர் வடவரை வணங்குவில் பொறித்து

புறநானூற்றுப் பாடல் எண்39 – 15 ஆம் அடி
ஓங்கிய வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமயம் சூட்டிய ஏம விற்பொறி

போன்ற பாடல்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.

மேலும் பதிற்றுப்பத்து சேரர்குல மரபை உறுதி செய்யும் வகையில் கரூர்க்கு அருகில் உள்ள புகளூர்த் தமிழ்ப் – பிராமி கல்வெட்டுகள் பதிற்றுப்பத்தின் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது ஆகியவற்றின் பாட்டுடைத் தலைவர்களான சேர மன்னர்கள் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. இங்கு 12 தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் உள்ளன.  அவை கோஅதன்செல்லிரும்பொறை (செல்வக்கடுங்கோவாழியாதன்) மகன் பெருங்கடுங்கோ (பெருஞ்சேரலிரும்பொறை) மகன் இளங்கடுங்கோ (இளஞ்சேரலிரும்பொறை) இளவரசனான போது தந்தை பெருங்கடுங்கோ யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்ற மூத்த சமணத் துறைவிக்கான உறைவிடம் ஏற்படுத்திக் கொடுத்ததைப் பற்றிக் கூறுகிறது.

இதே போல் சங்ககாலச் சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் பல கேரள மாநிலத்திலும், தமிழகத்திலும் கிடைத்துள்ளன. உலக நாணவியல் அறிஞர்களுள் தலைசிறந்தவர்களுள் ஒருவரான தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் வெளியிட்டுள்ள சங்ககாலச் சேர மன்னர் நாணயங்கள் சதுர வடிவில் உள்ளன. நாணயத்தின் முன் பகுதியில் யானை முத்திரையும் பின் பகுதியில் வில் அம்பும் அதற்க்குக் கீழ் அங்குசமும் உள்ளது. பின் பகுதியில் உள்ள இவை ஒரு வட்டத்துல் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இங்கு நமக்குக் கிடைத்துள்ள முத்திரை சுடு மண்ணாலானது. சில்லுப்போல் தோற்றம் உடையது. 15 செ.மீ சுற்று அளவும் 5செ.மீ விட்டமும் கொண்டது. நாணயங்களில் உள்ளது போலவே வில் அம்பு மேல் பகுதியிலும் கீழ்ப் பகுதியில் அங்குசமும் உள்ளது. இவை மூன்றும் ஒரு வட்டத்துள் உள்ளன. எனவே இது சேர மன்னர் முத்திரை தான் என்பது உறுதியாகிறது. இவை கி.மு. 2 நூற்றாண்டை சேர்ந்தது ஆகும்.

இதைப் பற்றி உலகத் தொல்லியல் அறிஞர்களுள் தலைசிறந்தவர்களில் ஒருவரும் தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் துணை இயக்குனருமான முனைவர் ர.பூங்குன்றனாரிடம் காண்பித்துக் கருத்துக் கேட்டபொழுது அவர் இது சேர மன்னர் முத்திரைதான் என்றும் இது சேர மன்னர்களால் அப்பகுதியை நிர்வாகம் செய்த குறுநில மன்னர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ சேர மன்னர்களால் வழங்கப்பட்டு இருக்கும் என்றும் நாணயங்களில் உள்ளது போன்றே முத்திரை காணப்படுகிறது என்றும் மேலும் கீழ்ப் பகுதியில் உள்ள அங்குசம் யானையைக் குறிக்கும் என்றும் கூறினார்.

தாங்கிகள்
            இங்குப் பெருங்கற்கால நாகரிகத்தைச் சார்ந்த தாங்கிகள் 10க்கும் மேல் கிடைத்துள்ளன. இவை களிமண்ணால் செய்து சுடப்பட்டவை ஆகும். மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் இதைப் போலத் தாங்கிகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்குக்கண்டெடுக்கப்பட்டுள்ள தாங்கிகள் அனைத்தும் சிவப்பு நிறங்களிலேயே காணப்படுகின்றன. இத்தாங்கியானது பானைகள் அல்லது பாத்திரங்கள் கீழே விழாமலும் அவை சாயாமல் இருக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். மேலும் இங்கு ஆடை நெசவு செய்யும் போது நூலைச் சுற்றி வைப்பதற்க்குப் பயன்படும் தறிக்கோல் ஒன்று 6செ.மீ உயரத்தில் கிடைத்து உள்ளது. 30 அரியவகைக் கல் மணிகளும், தாயம் விளையாடுவதற்க்காகப் பயன்படும் பலகறைப் பாசி(சோழி) மூன்றும், ஒரு முகம் கொண்ட 5 செ.மீ விட்டமுள்ள இரண்டு மண் விளக்குகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகல்விளக்குகளைப் பயன்படுத்தல் இன்றளவும் தமிழ்நாட்டில் நிலவும் ஒரு பண்பாடு சார்ந்த நிகழ்வாகும்.

குறியீடுகள்:
               தமிழ்ப்பிராமி வரிவடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்க்கு வருவதற்கு முன்பாகவே குறியீடுகள் சமகால மக்களின் எண்ணம் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை வரிவடிவமே என இதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிந்துவெளி எழுத்துக்களுக்கு அடுத்து இந்தியாவில் கிடப்பவை குறியீடுகள் ஆகும். இவை பரந்த அளவில் கிடைப்பதால் இக்குறியீடுகளின் மூலம் பண்பாட்டுப் பரவல் கூட நிகழ்ந்திருக்கலாம் என்பது எண்ணத்தக்கதாயுள்ளது.

இங்கு கிடைத்துள்ள குறியீடுகள் இலங்கை மற்றும் தமிழகத்தில் கரூர், அழகன்குளம், ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களில் கிடைத்த குறியீடுகளுடன் ஒத்துக் காணப்படுகின்றன. மேலும் கொடுமணல் போல் இங்கும் தமிழ்ப்பிராமி எழுத்துக் கொண்ட பெயர்களும் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. எனவே சோமவாரப்பட்டியும் கொடுமணலும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது. எனவே சங்ககாலத்தில் சோமவாரப்பட்டி சிறந்த நிலையில் இருந்திருக்க வேண்டும்.


கருத்துரையிடுக

1 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்