தமிழ்நாட்டிலுள்ள முருகனது தலங்கள்
யாவற்றிலும்
முதன்மையானதும், முருகனது அறுபடை வீடுகளில் சிறப்பானதும்
பழனி ஆகும். பழனி நகரின் தலவரலாற்றுச் சுருக்கம் கீழே
தரப்பட்டுள்ளது.
முதன்மையானதும், முருகனது அறுபடை வீடுகளில் சிறப்பானதும்
பழனி ஆகும். பழனி நகரின் தலவரலாற்றுச் சுருக்கம் கீழே
தரப்பட்டுள்ளது.
இன்றைய பழனி நகர்ப்பகுதி சங்க காலத்தில்
கொங்கு
நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு நாட்டின்
உட்பிரிவுகளில் திருஆவினன் குடிநாடு அல்லது வையாபுரி நாடு
ஒன்றாகும். ‘ஆவினன் குடி’ என்பது இன்றைய பழனி நகர்ப்
பகுதியாகும். ஆவினர் குடியினைச் சேர்ந்த மன்னர்கள்
இப்பகுதியை ஆட்சிபுரிந்தனர். சங்க கால வள்ளல்கள்
ஏழுபேரில் ஓருவரான வையாவிக் கோப்பெரும்பேகன் பழனிப்
பகுதியை ஆட்சி புரிந்தார் என்று கருதப்படுகிறது. கொங்குநாட்டைச்
சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் வென்றபொழுது
பழனிப் பகுதியும் அம்மன்னர்களின் ஆட்சியின்கீழ் வந்தது. மதுரை
நாயக்க அரசு காலத்தில் (கி.பி. 1529-1736) இவ்வரசின் ஒரு
பகுதியாகப் பழனி இருந்தது. மதுரைநாயக்கர் ஆட்சி முறையில்
பல பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அப்பொழுது பழனியும்
பாளையக்காரர் ஆட்சியின் கீழ் வந்தது. பழனி நகரை அடுத்துள்ள
ஆயக்குடியும், விருப்பாச்சியும் இதர முக்கிய பாளையங்களாகும்.
நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு நாட்டின்
உட்பிரிவுகளில் திருஆவினன் குடிநாடு அல்லது வையாபுரி நாடு
ஒன்றாகும். ‘ஆவினன் குடி’ என்பது இன்றைய பழனி நகர்ப்
பகுதியாகும். ஆவினர் குடியினைச் சேர்ந்த மன்னர்கள்
இப்பகுதியை ஆட்சிபுரிந்தனர். சங்க கால வள்ளல்கள்
ஏழுபேரில் ஓருவரான வையாவிக் கோப்பெரும்பேகன் பழனிப்
பகுதியை ஆட்சி புரிந்தார் என்று கருதப்படுகிறது. கொங்குநாட்டைச்
சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் வென்றபொழுது
பழனிப் பகுதியும் அம்மன்னர்களின் ஆட்சியின்கீழ் வந்தது. மதுரை
நாயக்க அரசு காலத்தில் (கி.பி. 1529-1736) இவ்வரசின் ஒரு
பகுதியாகப் பழனி இருந்தது. மதுரைநாயக்கர் ஆட்சி முறையில்
பல பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அப்பொழுது பழனியும்
பாளையக்காரர் ஆட்சியின் கீழ் வந்தது. பழனி நகரை அடுத்துள்ள
ஆயக்குடியும், விருப்பாச்சியும் இதர முக்கிய பாளையங்களாகும்.
பழனிப்பகுதியின் பாளையக்காரர்கள்
ஆந்திராவின்
அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள அகோபிலம் பகுதியிலிருந்து
வந்த தெலுங்குப் பேசும் மக்கள் ஆவர். இவர்கள் மதுரை நாயக்க
அரசைத் தோற்றுவித்த விஸ்வநாதருடன் தமிழகத்திற்கு வந்தவர்கள்
என்று கருதப்படுகிறது. மதுரைக் கோட்டையின் ஒரு
கொத்தளத்தைக் காவல் புரியும் பணியை இவர்கள் பெற்றிருந்தனர்,
பழனி பாளையத்தை முதலில் தோற்றுவித்தவர் ஆயக்குடி
பாளையக்காரர் மரபினரின் உறவினர் ஆவார். ஆயக்குடி பாளையக்காரர்களின் மரபினர், பழனி பாளையக்
அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள அகோபிலம் பகுதியிலிருந்து
வந்த தெலுங்குப் பேசும் மக்கள் ஆவர். இவர்கள் மதுரை நாயக்க
அரசைத் தோற்றுவித்த விஸ்வநாதருடன் தமிழகத்திற்கு வந்தவர்கள்
என்று கருதப்படுகிறது. மதுரைக் கோட்டையின் ஒரு
கொத்தளத்தைக் காவல் புரியும் பணியை இவர்கள் பெற்றிருந்தனர்,
பழனி பாளையத்தை முதலில் தோற்றுவித்தவர் ஆயக்குடி
பாளையக்காரர் மரபினரின் உறவினர் ஆவார். ஆயக்குடி பாளையக்காரர்களின் மரபினர், பழனி பாளையக்
காரருடன் திருமண உறவுகொண்டு, அவர்களின் நெருங்கிய உறவினர்களாக விளங்கினர். பழனி பாளையக்காரர்கள் பழனியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள பாலசமுத்திரத்தில் ஒரு கோட்டை கட்டி அதைத் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனர். இவர்கள் தங்கள் பெயருடன் ‘சின்னோவையன்’ என்ற குலப்பெயரையும் பெற்றிருந்தனர். தொடைப்புயச் சின்னோவையன், காக்கிவட வாடச் சின்னோவையன், கருப்பலச் சின்னோவையன், பெரிய வடவாடச் சின்னோவையன், ஆகியோர் பழனி பாளையக்கார மரபினரின் முன்னோர்களில் சிலர் ஆவார். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் குமார விஜயகிரி வேலச் சின்னோவையன் என்பவர் பழனி பாளையக்காரராக இருந்தார். இவர் விஜயரங்க சொக்கநாதர் (1706-1732) என்ற மதுரை நாயக்க மன்னரின் சம காலத்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிறந்த கவிஞராக விளங்கினார். வையாபுரிப் பள்ளு இவர் இயற்றிய நூல்களில் முக்கிய ஒன்றாகும். இவர் இயற்றிய ‘சமய மாலை’ என்ற நூலிலிருந்து இவர் பழனி மலைக் கோவிலுக்கு ஆற்றிய திருப்பணிகள் அறியப்படுகின்றன. கி.பி. 1755இல் ஹைதர் அலி பாலசமுத்திரக் கோட்டையைத் தாக்கி, அதன் பாளையக்காரரைத் தண்டனைத் தொகை கட்டுமாறு செய்தார். 1761ஆம் ஆண்டு ஹைதர் மைசூரின் மன்னரானார். எனவே, மைசூர் மன்னருக்கு உட்பட்ட பகுதியாகப் பழனி விளங்கிற்று. 1782இல் ஹைதர் திண்டுக்கல்லை ஆங்கிலேயரிடமிருந்து வென்ற பொழுது திண்டுக்கல்லின் 26 பாளையங்களில் ஒன்றாகப் பழனி விளங்கியது. ஹைதரின் மகன் திப்பு மூன்றாவது மைசூர்ப் போரில் ஆங்கிலேயரிடம் தோல்வியுற்ற பின் ஏற்பட்ட ஸ்ரீரங்கபட்டண உடன்படிக்கையின்படி, (கி.பி. 1792) பழனி, திண்டுக்கல்லுடன் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் வந்தது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் பழனி வந்த பின், பழனி பாளையக்காரரான வேலாயுத நாயக்கர், ஆங்கிலேயருக்குத் துன்பம் கொடுத்து வந்தார். 1794ஆம் ஆண்டு இவர் ஆயக்குடி பாளையக்காரருடன் சண்டையிடவும் செய்தார். 1795இல் ஆயக்குடிபாளையம், பழனி பாளையத்திலிருந்து பிரிக்கப்
|
பெரியநாயகி அம்மன் கோவில்
பழனி நகரின் மேற்குப் பகுதியில்
பெரியநாயகி அம்மன்
கோவில் உள்ளது. இக்கோவில் பழமையான ஒன்றாகும். பழனி,
ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி நாயக்கர் குடும்பத்தினரால்
இக்கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளன. நாட்டுக்
கோட்டை நகரத்தார்களால் இக்கோவிலின் நடராசர் சந்நிதிஅமைக்கப்பட்டது. நாடார் சமூகத்தினரின் திருப்பணியும்
இக்கோவிலில் உள்ளது.
கோவில் உள்ளது. இக்கோவில் பழமையான ஒன்றாகும். பழனி,
ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி நாயக்கர் குடும்பத்தினரால்
இக்கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளன. நாட்டுக்
கோட்டை நகரத்தார்களால் இக்கோவிலின் நடராசர் சந்நிதிஅமைக்கப்பட்டது. நாடார் சமூகத்தினரின் திருப்பணியும்
இக்கோவிலில் உள்ளது.
கொடிக்கம்பத்தின் எதிரே சோமாஸ்கந்தர்
சந்நிதியும்,
அதன் இருபக்கங்களில் கைலாசநாதர் சந்நிதியும், பெரிய
நாயகி அம்மன் சந்நிதியும் உள்ளன. பெரியநாயகி அம்மன்
இக்கோவிலின் முக்கிய தெய்வமாகக் கருதப்படுகிறார். அம்மன்
சந்நிதியை அடுத்து முத்துக்குமாரசுவாமி சந்நிதி உள்ளது.
கைலாசநாதர் சந்நிதிக்கு எதிரில் நடராசர் சந்நிதி உள்ளது.
அதன் இருபக்கங்களில் கைலாசநாதர் சந்நிதியும், பெரிய
நாயகி அம்மன் சந்நிதியும் உள்ளன. பெரியநாயகி அம்மன்
இக்கோவிலின் முக்கிய தெய்வமாகக் கருதப்படுகிறார். அம்மன்
சந்நிதியை அடுத்து முத்துக்குமாரசுவாமி சந்நிதி உள்ளது.
கைலாசநாதர் சந்நிதிக்கு எதிரில் நடராசர் சந்நிதி உள்ளது.
கலைச் சிறப்பு
நடராசர் சந்நிதி
நாட்டுக்கோட்டை நகரத்தார்களால்
அமைக்கப்பட்ட நடராசர்
சந்நிதி ஒரு கலைக்கருவூலம் ஆகும். இது முற்றிலும்
பளபளப்பான கருங்கல்லினாலாகியது. நுட்பமான
வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. கொடுங்கையின்
வேலைப்பாடு குறிப்பிடத்தக்கது. ‘இரண்டு கம்பி’களைக்
கொண்ட இச்சந்நிதியின் கொடுங்கைகள் உருவில் சிறியனவாயினும்
அழகில் சிறந்தவையே. தெற்கு நோக்கியுள்ள இச்சந்நிதியின் முன்
பகுதியில் மூன்று குரங்குகளுக்கு மூன்று உடல்களும், ஒரே
தலையும் உள்ளதுபோல் அமைக்கபடபட்டுள்ள சிற்பம்,
இதையமைத்த சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகிறது.
நவரங்க மண்டபம்
சந்நிதி ஒரு கலைக்கருவூலம் ஆகும். இது முற்றிலும்
பளபளப்பான கருங்கல்லினாலாகியது. நுட்பமான
வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. கொடுங்கையின்
வேலைப்பாடு குறிப்பிடத்தக்கது. ‘இரண்டு கம்பி’களைக்
கொண்ட இச்சந்நிதியின் கொடுங்கைகள் உருவில் சிறியனவாயினும்
அழகில் சிறந்தவையே. தெற்கு நோக்கியுள்ள இச்சந்நிதியின் முன்
பகுதியில் மூன்று குரங்குகளுக்கு மூன்று உடல்களும், ஒரே
தலையும் உள்ளதுபோல் அமைக்கபடபட்டுள்ள சிற்பம்,
இதையமைத்த சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகிறது.
நவரங்க மண்டபம்
பெரிய நாயகி அம்மன் கோபுர வாயிலுக்கு
வெளியில்
நவரங்க மண்டபம் உள்ளது. இம்மண்டபம் நாடார்
சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது. கி.பி.17ஆம் நூற்றாண்டின்
நவரங்க மண்டபம் உள்ளது. இம்மண்டபம் நாடார்
சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது. கி.பி.17ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் இம்மண்டபத்தின் ஒரு பகுதிக் கட்டடப் பகுதி எழுப்பும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுச் சில ஆண்டுகளில் நிறைவு பெற்று இன்றைய தோற்றத்தைப் பெற்றுள்ளது.
நவரங்க மண்டபத்தின் நடுவிலுள்ள ஒரு
தூணில்
பத்திரகாளியின் திருவுருவம் உள்ளது. இத்தெய்வம் இங்கு முக்கியமாக வழிபடப்படுகிறது. இம்மண்டபத்தில் 40 நெடிய தூண்கள் உள்ளன. முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள இம்மண்டபத் தூண்களில் தண்டபாணி சுவாமி, சுப்ரமணியர், நடராசர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்களும், இரண்டு துவாரபாலர்களின் சிற்பங்களும் உள்ளன. சில தூண்களின் உச்சிப்பகுதியில் வாயில் கல் உருண்டைகளுடன் சிங்கத்தின் உருவங்கள் விநோதமாகக் காட்சியளிக்கின்றன. நவரங்க மண்டபச் சிற்பங்கள் வேலைப் பாடுமிக்கவை. இவை இம்மண்டபத்தை ஒரு கலைக்கூடமாகக் காட்சியளிக்கச் செய்கின்றன.கி.பி. 17ஆம் நூற்றாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி விழா இம்மண்டபத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. கி.பி. 1634இல் பழனி மலைக் கோவிலுக்கு வருகை தந்த திருமலையின் அமைச்சர் இராமப்பய்யன் நவரங்க மண்டபத்தின் விஜயதசமி விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பழனி நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவில்
பெரியாவுடையார்
கோவில் உள்ளது. இங்குள்ள சிவன் பிரகதீஸ்வரர் அல்லது பெரியாவுடையார் எனப்படுகிறார். இக்கோவில் பாண்டிய, கொங்குச் சோழ மன்னர்களால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பழனி நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவில்
சண்முக நதி
என்ற புனிதமாகக் கருதப்படும் நதி ஓடுகிறது.
பழனி நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில்
பால
சமுத்திரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு அகோபிலம் வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இது கி.பி. 17ஆம் நூற்றாண்டில்
|
0 கருத்துகள்